ADDED : செப் 17, 2026 03:13 AM
அ நிறம் | அளவு
கோலார்: நில அளவையில் முறைகேடு செய்ததாக, கோலார் மாவட்ட நில அளவை ஆணையராக இருந்த ஜி.சுரேஷ் பாபு என்பவரை கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இதன் காரணமாக, கோலார் லோக் ஆயுக்தா போலீசார், தாமாகவே முன்வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து, சோதனை நடத்தி, 406 கோப்புகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் சந்தேகப்படும்படியாக இருப்பதால், அவரை கர்நாடக அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
