தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மணல் கடத்தல் இடங்களில் லோக் ஆயுக்தா சோதனை

 மணல் கடத்தல் இடங்களில் லோக் ஆயுக்தா சோதனை

 மணல் கடத்தல் இடங்களில் லோக் ஆயுக்தா சோதனை


ADDED : மே 22, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகல்கோட்: சட்ட விரோதமாக மணல் கடத்தல் நடந்த, பல இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் திடீர் சோதனை நடத்தினர். மணல் கடத்தியவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள், பறிமுதல் செய்யப்பட்டன.

பாகல்கோட் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடப்பதாக, லோக் ஆயுக்தாவுக்கு புகார் வந்தது. அந்த இடங்களில் சோதனை நடத்தும்படி, லோக் ஆயக்தா தலைமை நீதிபதி பி.எஸ்.பாட்டீல் உத்தரவிட்டார். இதன்படி, பாகல்கோட் லோக் ஆயுக்தா எஸ்.பி., மஹாநிங நந்தகாவி தலைமையில், நேற்று பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது.

முதோல், பாதாமி, ஹுன்குந்த், இளகல், ஜமகன்டி, பாகல்கோட் நகரங்களின் 24 இடங்களில் சோதனை நடந்தது.

பெருமளவில் மணல் கடத்தல் நடப்பதை கண்டுபிடித்தனர். மொத்தம், 65 டிப்பர்கள், 18 ஹிடாச்சி இயந்திரங்கள், ஆறுகளில் இருந்து மணல் அள்ள 14 மின்விசை படகுகள், ஆறு டிராக்டர்கள், ஜே.சி.பி., இயந்திரம் என, பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டன.

சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்க தவறிய, பாகல்கோட் மாவட்ட கலெக்டர், பெங்களூரின் சுரங்கம், நில ஆய்வியல் துறை இயக்குநர், நுணை இயக்குநர், பாதாமி, ஜமகன்டி, ஹுன்குந்த், இளகல் தாலுகா தாசில்தார்கள் மீது, லோக் ஆயுக்தா அதிகாரிகள் புகார் பதிவு செய்தனர். விசாரணையை துவக்கி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us