sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பெலகாவி டி.சி.சி., வங்கி தேர்தலில் பரபரப்பு  அமைச்சர் - எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் மோதல்

/

பெலகாவி டி.சி.சி., வங்கி தேர்தலில் பரபரப்பு  அமைச்சர் - எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் மோதல்

பெலகாவி டி.சி.சி., வங்கி தேர்தலில் பரபரப்பு  அமைச்சர் - எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் மோதல்

பெலகாவி டி.சி.சி., வங்கி தேர்தலில் பரபரப்பு  அமைச்சர் - எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் மோதல்


ADDED : அக் 20, 2025 06:57 AM

Google News

ADDED : அக் 20, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: பெலகாவி டி.சி.சி., எனும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, நேற்று தேர்தல் நடந்தது. பிரதிநிதித்துவ ஆவணம் தரவில்லை என்று கூறியதால், அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி ஆதரவாளர்கள் மோதி கொண்டனர்.

பெலகாவியில் டி.சி.சி., எனும் மத்திய கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு புதிய தலைவர், துணை தலைவரை தேர்வு செய்ய, 16 இயக்குனர் பதவிக்கு அக்டோபர் 19 ம் தேதி (நேற்று) தேர்தல் நடக்கும் என்று அறிவிப்பு வெளியானது. தேர்தல் நடப்பதற்கு முன்பே 9 பேர் போட்டியின்றி இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் 7 பேர் ஜார்கிஹோளி சகோதரர்கள் அணியை சேர்ந்தவர்கள்.

ஹுக்கேரி, அதானி, நிப்பானி, பைலஹொங்கல், கிட்டூர், ராமதுர்கா, ராய்பாக் ஆகிய 7 தாலுகாக்களில் இயக்குனரை தேர்வு செய்ய, பெலகாவியில் நேற்று தேர்தல் நடந்தது. விவசாயிகள், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாளர்கள் அமைதியாக வந்து ஓட்டு போட்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை, அதானி காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதியின் ஆதரவாளர்கள், பெலகாவியில் உள்ள ஹோட்டல் முன் திடீரென போராட்டம் நடத்தினர்.

'ஓட்டு போடுவதற்கு தேவையான பிரதிநிதித்துவ ஆவணத்தை, எங்களுக்கு கொடுக்கவில்லை. அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறியதால், பிரதிநிதித்துவ ஆவணம் மறைத்து வைக்கப்பட்டு உள்ளது. தனது தரப்பு வேட்பாளர் அப்பாசாகேப்பை வெற்றி பெற வைக்க, சதீஷ் சூழ்ச்சி செய்கிறார்' என்றனர்.

அப்போது அங்கு வந்த சதீஷின் ஆதரவாளர்கள், லட்சுமண் சவதிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த பெலகாவி டி.சி.பி., நாராயண் பரமணி, இருதரப்பினரையும் எச்சரித்தார். பிரதிநிதித்துவ ஆவணம் கொடுக்கவில்லை என்றால், போலீசில் சென்று புகார் செய்யுங்கள்; இங்கு நின்று சண்டை போட்டால் அவ்வளவு தான் என்று திட்டினார்.

இதையடுத்து கேம்ப் போலீஸ் நிலையத்தில், சதீஷ் தரப்பு வேட்பாளர் அப்பாசாகேப் மீது, லட்சுமண் சவதி ஆதரவாளர்கள் புகார் செய்தனர்.






      Dinamalar
      Follow us