sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 30, 2026 ,தை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கடன் தொல்லையால் தாய், மகன் தற்கொலை

/

கடன் தொல்லையால் தாய், மகன் தற்கொலை

கடன் தொல்லையால் தாய், மகன் தற்கொலை

கடன் தொல்லையால் தாய், மகன் தற்கொலை


ADDED : ஏப் 01, 2025 08:09 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொட்டபல்லாபூர்: கடன் தொல்லையால், தாய் தற்கொலை செய்து கொண்டதால், மனம் நொந்து மகனும் தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவின், கொனகட்டா கிராமத்தில் வசித்தவர் சந்திரிகா, 46. இவரது மகன் ரக்ஷித் பாபு, 24. இவர் ஸ்விக்கி, பைவ் ஸ்டார் உட்பட, பல்வேறு நிறுவனங்களில் டெலிவரி பாயாக பணியாற்றினார்.

இவரது குடும்பத்தினர் பலரிடம் கடன் வாங்கி, அடைக்க முடியாமல் அவதிப்பட்டனர். கடன் கொடுத்தவர்கள், வீட்டுக்கு வந்து தகராறு செய்ததால், சந்திரிகா அவமானம் அடைந்தார். ஒன்றரை மாதத்துக்கு முன்பு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாய் தற்கொலை செய்து கொண்டதால், மனம் நொந்த ரக்ஷித் பாபு, நேற்று காலை தொட்டபல்லாபூரின் நந்திமோரி அருகில் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை இதை பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தொட்டபல்லாபூர் ஊரக போலீசார், அவரது உடலை மீட்டனர்.

வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us