sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பிரசவத்தில் தாய் பலி: டாக்டர்கள் மீது புகார்

/

பிரசவத்தில் தாய் பலி: டாக்டர்கள் மீது புகார்

பிரசவத்தில் தாய் பலி: டாக்டர்கள் மீது புகார்

பிரசவத்தில் தாய் பலி: டாக்டர்கள் மீது புகார்


ADDED : அக் 20, 2025 06:55 AM

Google News

ADDED : அக் 20, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகல்கோட்: குழந்தை பிரசவித்த சில மணி நேரத்தில் மாரடைப்பால் தாய் உயிரிழந்தார். இதற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, குடும்பத்தினர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெலகாவி மாவட்டம், ராமதுர்கா தாலுகாவின் அரெபென்சி கிராமத்தில் வசித்தவர் பூர்ணிமா, 23. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, நேற்று முன் தினம் காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் பாகல்கோட்டின் குமாரேஸ்வரா மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு மதியம் 12:30 மணியளவில் சிசேரியன் எனும் மூலமாக பிரசவம் நடந்தது. அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இரவு 7:30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என பூர்ணிமாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது, டாக்டர்கள் வந்து பரிசோதித்து, சிகிச்சை அளிப்பதற்கு பதில், நர்சை அனுப்பி ஊசி போட வைத்துள்ளனர்.

சிறிது நேரத்தில் பூர்ணிமா துடிதுடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து, பாகல்கோட் நகர் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை டாக்டர்கள் மறுத்துள்ளனர். சிகிச்சை அளித்ததில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை என்கின்றனர்.






      Dinamalar
      Follow us