sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

'நரேகா' திட்ட தொழிலாளர்கள் பணி நேரம் குறைத்து சலுகை

/

'நரேகா' திட்ட தொழிலாளர்கள் பணி நேரம் குறைத்து சலுகை

'நரேகா' திட்ட தொழிலாளர்கள் பணி நேரம் குறைத்து சலுகை

'நரேகா' திட்ட தொழிலாளர்கள் பணி நேரம் குறைத்து சலுகை


ADDED : ஏப் 05, 2025 01:17 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பெலகாவி, கலபுரகி மாவட்டங்களில் நடப்பாண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, காலை 8:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பணியாற்ற சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே அறிக்கை:


பெலகாவி, கலபுரகியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கிராமப்புற பகுதிகளில் நரேகா திட்டப்பணிகள், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாகும். எனவே, இவ்விரு மாவட்டங்களில் நரேகா திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் பணி அழுத்தத்தில் 30 சதவீதம் குறைத்து உத்தரவிட்டு உள்ளார். இந்த சலுகை, மே மாதம் இறுதி வரை அமலில் இருக்கும்.

பணி நேரத்தின் போது தொழிலாளர்கள் வெள்ளை நிற காதி ஆடைகள் அணிந்தும், தலையில் வெள்ளை துணியை கட்டிக் கொள்ள வேண்டும். டீ, காபி, குளிர்பானம், காரமான உணவு, எண்ணெய் உணவு களை தவிர்க்க வும். அதற்கு பதிலாக, நீர் சத்து உள்ள காய்கறிகள், நெல்லிக்காய், மோர், அதிகளவில் தண்ணீர் குடிக்கவும்.

அடிப்படை வசதிகளான குடிநீர், முதலுதவி பெட்டி உட்பட தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us