தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போதையில் 'அட்ராசிட்டி' மரக்கன்று நட உத்தரவு 

 போதையில் 'அட்ராசிட்டி' மரக்கன்று நட உத்தரவு 

 போதையில் 'அட்ராசிட்டி' மரக்கன்று நட உத்தரவு 


ADDED : செப் 02, 2026 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 12:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கோடி: போதையில் 'அட்ராசிட்டி' செய்தவரை, 50 மரக்கன்றுகள் நடுமாறு, ஜே.எம்.எப்.சி., நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெலகாவி மாவடம் யக்சம்பா பகுதியை சேர்ந்தவர் அனில் நிங்கப்பா பூஜாரி, 38. இவர் சில வாரங்களுக்கு முன், தனது வீட்டருகே மதுபோதையில் கத்திக்கொண்டிருந்தார். பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக, சடலகா போலீசார், அவரை கைது செய்து ஜே.எம்.எப்.சி., எனும் 'ஜூடிசியல் மாஜிஸ்திரேட்' முதல் நிலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

ஜே. எம்.எப்.சி., நீதிமன்றத்தில் அனில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அனிலுக்கு அபராதம், சிறைத்தண்டனை எதுவும் வழங்காமல், 50 மரக்கன்றுகளை நடுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, அவர் நீதிமன்ற வளாகத்தில், 25 மரக்கன்றுகளையும், சடலகா போலீஸ் நிலைய வளாகத்தில் 25 மரக்கன்றுகளையும் நட்டார்.

இந்த நுாதன தீர்ப்பை பலரும் பாராட்டியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us