/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விபத்தில் காயமடைந்தவர் மூளைச்சாவு உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்
/
விபத்தில் காயமடைந்தவர் மூளைச்சாவு உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்
விபத்தில் காயமடைந்தவர் மூளைச்சாவு உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்
விபத்தில் காயமடைந்தவர் மூளைச்சாவு உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்
ADDED : டிச 18, 2025 07:06 AM

ஹாசன்: சாலை விபத்தில் காயமடைந்து, மூளை செயலிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவரது இதயம் ஹாசனில் இருந்து, மைசூருக்கு 'ஜீரோ டிராபிக்' வசதியில் கொண்டு செல்லப்பட்டது.
ஹாசன் மாவட்டம், சென்னராயபட்டணா தாலுகாவின் சாகதவள்ளி கிராமத்தில் வசித்தவர் லோகேஷ், 35. இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பின், குடும்பத்துடன் பெங்களூரில் வசித்த இவர், கொரோனா நேரத்தில் சொந்த ஊருக்கு சென்றார். விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தினார்.
டிசம்பர் 11ம் தேதி, வீட்டுக்கு மளிகைப்பொருட்கள் வாங்க, கடைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். ஆனெகெரே அருகில் செல்லும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. காயமடைந்த அவர், சென்னராயபட்டணா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, கூடுதல் சிகிச்சைக்காக ஹாசனின் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து ஹிம்ஸ் மற்றும் பெங்களூரின் பிரபலமான தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது சிகிச்சைக்காக லட்சக்கணக்கான ரூபாயை, குடும்பத்தினர் செலவிட்டனர். ஆனாலும், குணமடையவில்லை. எனவே மீண்டும் ஹாசனின் ஹிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், லோகேஷின் மூளை செயல் இழந்ததாக தெரிவித்தனர். மகன் பிழைக்க வாய்ப்பில்லை என்பது தெரிய வந்ததால், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, பெற்றோர் முன் வந்தனர். பெங்களூரில் இருந்து வந்த வல்லுநர்கள் குழுவினர், ஆய்வு செய்த பின் இதயம், கல்லீரல் உட்பட மற்ற உறுப்புகள் தானம் பெறப்பட்டன.
லோகேஷின் இதயம், நேற்று ஹாசனில் இருந்து, மைசூரின் தனியார் மருத்துவமனைக்கு, ஜீரோ டிராபிக் வசதியில் கொண்டு செல்லப்பட்டது.

