ADDED : ஜூன் 06, 2026 11:36 PM

பெங்களூரு: சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சில், திடீரென தீப்பிடித்தது. பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
'ஸ்ரீதுர்காம்பா' என்ற பெயர் கொண்ட தனியார் பஸ், நேற்று மதியம் ஷிவமொக்காவில் இருந்து, உடுப்பி மாவட்டத்தின், குந்தாபுராவுக்கு சென்று கொண்டிருந்தது.
ஷிவமொக்கா - உடுப்பி எல்லையில், ஹுலிகல் காட் என்ற இடத்தில் செல்லும் போது, பஸ்சில் திடீரென தீப்பிடித்தது, தீயை கண்டதும் உடனடியாக பஸ்சை, சாலை ஓரமாக நிறுத்திய ஓட்டுநர், பயணியரை கீழே இறக்கினார்.
இந்த சம்பவத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து அங்கு வந்த தீயணைபு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.
தொழில்நுட்ப பிரச்னை காரணமாக, பஸ்சில் தீப்பிடித்திருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. பயணியருக்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில், நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஷிவமொக்கா போலீசார், தீப்பிடித்த பஸ்சை அப்புறப்படுத்தி. போக்குவரத்தை சரி செய்தனர்.
