sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உடல் பரிசோதனை அதிகாரி அட்வைஸ்

உடல் பரிசோதனை அதிகாரி அட்வைஸ்

உடல் பரிசோதனை அதிகாரி அட்வைஸ்


ADDED : ஜூலை 05, 2025 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2025 06:26 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''திடக்கழிவு மேலாண்மை பணியாளர்கள், தங்கள் உடல் நலனை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,'' என, பெங்களூரு மாநகராட்சி நிர்வாக அதிகாரி துஷார் கிரிநாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெங்களூரு மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை பிரிவில் பணி செய்யும் அதிகாரிகள், ஊழியர்களுடன் மாநகராட்சி நிர்வாக அதிகாரி துஷார் கிரிநாத் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

திடக்கழிவு மேலாண்மை பணியாளர்கள், தங்கள் உடல் நலனை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தேவையான சிகிச்சை பெற வேண்டும். இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற, மாநகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது. இவர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

பெங்களூரு கிழக்கு, மேற்கு, தெற்கு, பொம்மனஹள்ளி, மஹாதேவபுரா ஆகிய ஐந்து மண்டலங்களில் பணிபுரியும் 600க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு முதல்கட்டமாக காலநிலை குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us