/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பத்திரப்பதிவு வாயிலாக ரூ.29,000 கோடி வருவாய் வசூலிக்க திட்டம்
/
பத்திரப்பதிவு வாயிலாக ரூ.29,000 கோடி வருவாய் வசூலிக்க திட்டம்
பத்திரப்பதிவு வாயிலாக ரூ.29,000 கோடி வருவாய் வசூலிக்க திட்டம்
பத்திரப்பதிவு வாயிலாக ரூ.29,000 கோடி வருவாய் வசூலிக்க திட்டம்
ADDED : மார் 07, 2026 06:22 AM
முத்திரைத்தாள் மற்றும் பதிவு
நடப்பாண்டுக்கான முத்திரைத்தாள் விற்பனை மற்றும் பத்திரபதிவு வாயிலாக, 29 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வசூலிக்க அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
போக்குவரத்து
நடப்பாண்டு ஜனவரி வரை, இரு சக்கர வாகனங்கள் விற்பனை 13 சதவீதமும்; கார்களின் விற்பனை நான்கு சதவீதம் அதிகரித்து உள்ளது.
நடப்பாண் டு பிப்ரவரி வரை வருவாய் வசூல் 11,630 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட, 8.5 சதவீதம் அதிகமாகும்.
நடப் பாண்டு மோட்டார் வாகனங்களில் இருந்து வருவாய் வசூல், 15,500 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சுரங்கங்கள் மற்றும் புவியியல்
கர்நாடக சிறு கனிம விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. மேலும், குவாரி குழிகள் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். ஓ.டி.எஸ்., எனும் ஒருமுறை தீர்வு திட்டத்தின் கீழ், வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், 2026 - 27 நிதியாண்டில், 2,000 கோடி ரூபாய் வசூலிக்கப்படும்.
நடப்பு நிதியாண்டிற்கான சுரங்க வரியில் இருந்து, 3,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டில் சுரங்கங்கள் மீதான ராயல்டி மூலம், 11 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

