/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தாமாக முன்வந்து 61,000 புகார்களை பதிவு செய்த போலீஸ் அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
/
தாமாக முன்வந்து 61,000 புகார்களை பதிவு செய்த போலீஸ் அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
தாமாக முன்வந்து 61,000 புகார்களை பதிவு செய்த போலீஸ் அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
தாமாக முன்வந்து 61,000 புகார்களை பதிவு செய்த போலீஸ் அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
ADDED : டிச 19, 2025 05:17 AM
பெங்களூரு: ''கர்நாடகாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளில், போலீசார், 61,299 புகார்களை தாமாக முன்வந்து பதிவு செய்துள்ளனர்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் ரவியின் கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறியதாவது:
இரண்டரை ஆண்டுகளில், போலீசார், 61,299 புகார்களை தாமாக முன் வந்து பதிவு செய்துள்ளனர். அவற்றில், 57,646 புகார்கள் தொடர்பாக, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். எந்த புகார்களையும் திரும்ப பெறவிலை.
சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் போது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால், அரசு பணிக்கு இடையூறு ஏற்படுத்துவது என, பல சந்தர்ப்பங்களில் யாரும் புகார் அளிக்க முன் வருவதில்லை. எனவே, போலீசார் தாமாக புகாரை பதிவு செய்து, விசாரணை நடத்துவர். பொது மக்களின் உயிர் மற்றும் மானத்தை காப்பாற்றும் நோக்கில், போலீசார் இத்தகைய நடவடிக்கை எடுக்கின்றனர்.
இவ்வாறு கூறினார்.

