sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை

/

ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை

ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை

ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை


ADDED : ஜூலை 20, 2025 09:47 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பெங்களூரின் பல்வேறு இடங்களில், நுாற்றுக்கணக்கான ரவுடிகளின் வீடுகளில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

பெங்களூரின் வடக்கு மண்டல பகுதிகளில் டி.சி.பி., நேமகவுடா உத்தரவுப்படி, ஏ.சி.பி.,க்கள் தலைமையில் 13 போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், ஏட்டுகள் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். 216 ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடந்தது.

ரவுடிகளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்கள் தற்போது செய்யும் தொழில், மொபைல் எண், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை கேட்டறிந்தனர். ஏதாவது குற்றங்களில் ஈடுபடுகின்றனரா என்பதை ஆய்வு செய்தனர்.

'எந்த காரணத்தை முன்னிட்டும், ரவுடியிசம் செய்யக்கூடாது. சமுதாயத்தில் அமைதியை குலைக்கும்படி நடக்காதீர்கள். பொது மக்களை மிரட்டக் கூடாது. குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்து அனுப்பினர்.

போலீசார் சோதனைக்கு வந்ததால், ரவுடிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us