/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவனுக்கு பாலியல் தொல்லை போலீஸ் ஏட்டு கைது
/
மாணவனுக்கு பாலியல் தொல்லை போலீஸ் ஏட்டு கைது
ADDED : ஜன 26, 2026 04:49 AM
பெங்களூரு: பி.யு., முதலாம் ஆண்டு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு சுதந்திர பூங்காவில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்த அனுமதி உள்ளது. சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு போராட்டத்தின் போது, பி.யு., முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் சுதந்திர பூங்காவிற்கு வந்துள்ளார். அச்சமயத்தில், அங்கே பாதுகாப்பு பணியில் ஆர்.டி., நகர் போலீஸ் நிலைய ஏட்டு யமுனா நாயக், 26, ஈடுபட்டிருந்தார்.
இவர், மாணவரிடம் பேச்சு கொடுத்து, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாணவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து, உப்பார்பேட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் உப்பார்பேட் போலீசார், ஏட்டு யமுனா நாயக்கை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

