ADDED : பிப் 11, 2026 09:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டையில், சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று மின்சாரம் தடை செய்யப்படுகிறது என, பெஸ்காம் நிறுவனம் அறிவித்துள்ளது.
ராபர்ட்சன்பேட்டை - பாரண்ட ஹள்ளி சாலையில் உள்ள விவேக் நகரில், சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடப்பதால், சொர்ணாநகர், பழைய சொராணகுப்பம், விவேக் நகர், கணேஷ் புரம், அஸ்வத் லே அவுட் ஆகிய இடங்களில் இன்று காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

