sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.,ஐ சீண்டும் பிரியங்க்

மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.,ஐ சீண்டும் பிரியங்க்

மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.,ஐ சீண்டும் பிரியங்க்


ADDED : நவ 12, 2025 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2025 03:35 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் உள்ளவர்கள் கடவுளை விட பெரியவர்களா?'' என, அமைச்சர் பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும், தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ்., குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதால், தேசிய அளவில் பிரபலமடையலாம் என்று கருதி செயல்பட்டு வருகிறார். இதற்கு அந்த அமைப்பினரும் சரியான நேரத்தில் தக்க பதிலடியை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு குறித்து பிரியங்க் கார்கே கூறியதாவது:

நம் நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு சரியான கணக்கு பராமரிக்கப்படுகிறது. கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்கப்படும் பணத்துக்கு கூட கணக்கு உண்டு.

அப்படி இருக்கையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு கொடுக்கப்படும் நன்கொடைகளுக்கு கணக்குகள் ஒழுங்காக பராமரிக்கப்படுகிறதா என்பது சந்தேகமே. ஆர்.எஸ்.எஸ்.,சில் உள்ளவர்கள் கடவுளை விட பெரியவர்களா?

அந்த அமைப்பு இன்னும் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை. முறைப்படி பதிவு செய்தால், வருமானம் கணக்கிடப்படும். வரி கட்ட வேண்டி இருக்கும். இதனால், அவர்கள் பதிவு செய்யாமல் உள்ளனர். அதுபோல அந்த அமைப்பில் உள்ளவர்கள் அறிவுடன் பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us