
ரயில் இன்ஜின் சிவகுமார் காங்கிரஸ் கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. தலைமை மாற்றம் விஷயத்திலும் குழப்பம் ஏதும் இல்லை. துணை முதல்வர் சிவகுமாரை பாறை போன்று பார்க்க கூடாது.
ரயில் இன்ஜின் போன்று பார்க்க வேண்டும். ரயில் வரும் போது, பெரிதாக சத்தம் வரும்; அப்போது டீ விற்போர், தின்பண்டம் விற்போரும் குரல் கொடுப்பர். அதே போன்று, சிவகுமார் வரும் போதும், செல்லும் போதும் ஆர்ப்பரிப்பு இருக்கும். கட்சியின் தலைவராக, அனைவரையும் இழுத்து செல்கிறார். தலைமை மாற்றம் குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்வார். ஒரு வாகனம் ஒரே நேரத்தில் இரண்டு பாதைகளில் செல்ல முடியாது. அரசில் முதல்வர் சித்தராமையாவும், கட்சியில் துணை முதல்வர் சிவகுமாரும் முன்னணியில் இருக்கின்றனர். கர்நாடகாவில் அரசியல் நிலவரம் குறித்து, மேலிட தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும் கார்கேவுக்கு தெரியும். நேரம் வரும் போது சரியான முடிவை எடுப்பர். காங்கிரஸ் மேலிடம் பலவீனமாக இல்லை. ---ஹரிபிரசாத் , எம்.எல்.சி., - காங்கிரஸ்

