sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 தங்கவயலில் 500 ஏக்கரில் ரயில் பெட்டி தொழிற்சாலை ம.ஜ.த., - எம்.பி., தகவல்

/

 தங்கவயலில் 500 ஏக்கரில் ரயில் பெட்டி தொழிற்சாலை ம.ஜ.த., - எம்.பி., தகவல்

 தங்கவயலில் 500 ஏக்கரில் ரயில் பெட்டி தொழிற்சாலை ம.ஜ.த., - எம்.பி., தகவல்

 தங்கவயலில் 500 ஏக்கரில் ரயில் பெட்டி தொழிற்சாலை ம.ஜ.த., - எம்.பி., தகவல்


ADDED : டிச 27, 2025 06:27 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: ''தங்கவயலில், தங்கச் சுரங்க நிறுவனத்தின், 500 ஏக்கர் காலி நிலத்தில், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்,'' என, கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபு தெரிவித்தார்.

கோலாரின் தொட்லிகேட் என்ற இடத்தில், ஷிருடி சாய்பாபா கோவிலில் மண்டல பூஜை நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பின் அவர் அளித்த பேட்டி:

ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு, 500 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. கர்நாடகாவில் எங்கும், 500 ஏக்கர் நிலம் கிடைக்கவில்லை என்பதால், சென்னையில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைத்தது. உடனடியாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் வி.சோமண்ணா ஆகியோரை சந்தித்து, தங்கவயலில் தங்கச்சுரங்க நிறுவனத்தின் 12,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

அதில், 500 ஏக்கர் நிலத்தில், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கலாம் என்று தெரிவித்தேன். அதனை ஏற்று ஒப்புதல் அளித்தனர். இதற்கான பணிகளை ரயில்வே விரைவில் மேற்கொள்ள உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us