ADDED : பிப் 23, 2026 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: பி.யு., இரண்டாம் ஆண்டு தேர்வு நடப்பதால், வரும் 28 முதல் மார்ச் 17 வரை தேர்வு மையங்களை சுற்றிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மைசூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மைசூரில் 28 தேர்வு மையங்களில், பி.யு., இரண்டாம் ஆண்டு தேர்வு, பிப்., 28 முதல் மார்ச் 17 வரை நடக்கிறது. இந்த தேர்வு மையங்களை சுற்றி, 200 மீட்டர் சுற்றளவுக்கு காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நேரத்தில் ஜெராக்ஸ் கடைகள், புகைப்பட கடைகள், கம்ப்யூட்டர் மையங்கள் திறக்க அனுமதி இல்லை. தேர்வு மையங்களுக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை' என குறிப்பிட்டு உள்ளது.

