sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்

/

அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்

அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்

அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்


ADDED : மே 09, 2025 11:33 PM

Google News

ADDED : மே 09, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனேக்கல்: அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு வீட்டில் இருந்து, மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற கேரள வாலிபர் கால் எலும்பு முறிந்தது.

பெங்களூரு ரூரல் ஆனேக்கல் அருகே கர்பூர் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பின், முதல் மாடியின் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, ஆனேக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு நேற்று காலை போலீசார் சென்றனர். போலீஸ் வருவதை கவனித்து ஒரு வீட்டில் இருந்த நான்கு வாலிபர்கள், முதல் மாடியில் இருந்து கீழே குதித்தனர். மூன்று பேர் தப்பிய நிலையில், ஒருவர் மட்டும் கால் எலும்பு முறிந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

அவர்கள் வசித்த வீட்டிற்குள் சென்று, போலீசார் பார்த்தபோது, ஒரு அறையில் பெரிய மூட்டைக்குள் பொட்டலம், பொட்டலமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

கைது செய்யப்பட்ட வாலிபரிடம் விசாரித்தபோது, கேரளாவின் சச்சின், 28, என்பது தெரிந்தது. தப்பி ஓடியவர்கள் ராஷி, சஞ்சு, உமேத் என்றும் தெரிய வந்தது.

இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து ஒடிசா உட்பட வெளிமாநிலங்களில் இருந்து, குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கி வந்து, அடுக்குமாடி குடியிருப்பில் பதுக்கி கல்லுாரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிக விலைக்கு விற்றது தெரிந்தது.

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கால் முறிந்ததால் சச்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மற்ற 3 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us