sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளுக்கு அரசு கட்டடங்களுக்கு தடை? தலைமை செயலருக்கு உத்தரவு

/

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளுக்கு அரசு கட்டடங்களுக்கு தடை? தலைமை செயலருக்கு உத்தரவு

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளுக்கு அரசு கட்டடங்களுக்கு தடை? தலைமை செயலருக்கு உத்தரவு

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளுக்கு அரசு கட்டடங்களுக்கு தடை? தலைமை செயலருக்கு உத்தரவு


ADDED : அக் 14, 2025 04:57 AM

Google News

ADDED : அக் 14, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகல்கோட்: ''தமிழகம் போன்று, கர்நாடகாவிலும் அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது குறித்து, மாநில தலைமை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, கர்நாடக காங்., அரசின் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பாகல்கோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஆர்.எஸ்.எஸ்., தன் நடவடிக்கைகளுக்காக அரசு கட்டடங்களை பயன்படுத்திக் கொள்கிறது. தமிழகம் போன்று, அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக, மாநில தலைமை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திகெரே ஜே.பி., பூங்காவில் நடந்த பெங்களூரு நடைப்பயிற்சி நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., முனிரத்னாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. மேடைக்கு வந்த அவர், தன் கருத்தை தெரிவித்திருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யவில்லை. எனக்கு பில்லி சூனியத்தில் நம்பிக்கை இல்லை. அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்போது, வால்மீகி சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us