sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 சாய்பாபா 100வது பிறந்தநாள் பெங்., - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்

/

 சாய்பாபா 100வது பிறந்தநாள் பெங்., - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்

 சாய்பாபா 100வது பிறந்தநாள் பெங்., - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்

 சாய்பாபா 100வது பிறந்தநாள் பெங்., - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்


ADDED : நவ 15, 2025 08:02 AM

Google News

ADDED : நவ 15, 2025 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: சாய்பாபா நுாற்றாண்டு விழாவை ஒட்டி, பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தென்மேற்கு ரெயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:

புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையத்தில் கொண்டாடப்பட உள்ள சாய்பாபாவின் நுாற்றாண்டு விழாவை ஒட்டி, பயணியர் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையங்கள் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இன்று மதியம் 1:00 மணிக்கு, பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் 06543, நாளை காலை 6:40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையம் செல்லும்.

நாளை காலை 9:30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்படும் ரயில் 06544, நாளை மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு, கன்டோன்மென்ட் ரயில் நிலையம் வந்தடையும்.

வரும் 22ம் தேதி மாலை 3:00 மணிக்கு எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் 06549, மறுநாள் காலை 6:40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடையும். 23ம் தேதி காலை 9:30 மணிக்கு திருவனந்தபுரத்தில் புறப்படும் ரயில் 06550, மறுநாள் காலை 3:30 மணிக்கு எஸ்.எம்.வி.டி.,க்கு வரும்.

இந்த ரயில்கள் கே.ஆர்.புரம், பங்கார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாசேரி, திருவல்லா, செங்கானுார், காயங்குளம், கொல்லம், வர்கலா சிவகிரி ரயில் நிலையங்களில் நிற்கும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us