/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கவர்னருக்கு எதிரான தீர்ப்பு சித்தராமையா வரவேற்பு
/
கவர்னருக்கு எதிரான தீர்ப்பு சித்தராமையா வரவேற்பு
ADDED : ஏப் 10, 2025 04:57 AM
பெங்களூரு: முதல்வர் சித்தராமையா அறிக்கை:
தமிழக அரசின் 10 மசோதாக்கள் மீது நீண்ட காலமாக முடிவு எடுக்காமல் இருந்து விட்டு, பின் ஜனாதிபதி பரிசீலனைக்கு அம்மாநில கவர்னர் ரவி அனுப்பி உள்ளார்.
இதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை கூறி உள்ளது. இந்த தீர்ப்பு பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் எச்சரிக்கை விடுப்பது போன்றுள்ளது. கர்நாடகாவிலும் அரசால் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களுக்கு, ஜனாதிபதி ஒப்புதலை பெறுவதில் கவர்னர் தாமதம் செய்ததால், மோதலுக்கு வழிவகுத்தது. இருந்தாலும் எங்கள் அரசு அரசியல் செய்யாமல், நிதானமாக செயல்பட்டு வருகிறது.
தற்போது உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மாநில அரசு, கவர்னர்களுக்கு இடையிலான தேவையற்ற மோதலை, நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

