ADDED : பிப் 12, 2026 05:29 AM
ஹெச்.ஏ.எல்.: பெங்களூரின், விக்ஞான நகரில், ஆதர்ஷா விஸ்தா அபார்ட்மென்டில் வசித்தவர் நவீன் சந்திரபட், 60. இவர் கப்பற்படையில் ஓய்வு பெற்ற கேப்டன். இவரது மனைவி ஷியாமளா, 55. இவர் பல் டாக்டராக பணியாற்றினார். தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மகள் வெளிநாட்டில் வசிக்கிறார். மகன் ரோஹன் பட், 33, பெற்றோருடன் வசிக்கிறார். குடும்ப பிரச்னை காரணமாக, பெற் றோருக்கும், மகனுக்கும் அவ்வப்போது தகராறு நடப்பது வழக்கம்.
நேற்று காலை 7:30 மணியளவில், வழக்கம் போன்று மூவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த ரோஹன் பட், தாய், தந்தையை கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த இருவரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று மாலை நவீன் சந்திரபட்டும், அவரது மனைவி ஷியாமளாவும் உயிரிழந்தனர். ஹெச்.ஏ.எல்., போலீசார், கொலையாளி ரோஹனை கைது செய்தனர்.

