sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஆடுகள் பிரிப்பதில் மோதல் தந்தையை கொன்ற மகன்

/

ஆடுகள் பிரிப்பதில் மோதல் தந்தையை கொன்ற மகன்

ஆடுகள் பிரிப்பதில் மோதல் தந்தையை கொன்ற மகன்

ஆடுகள் பிரிப்பதில் மோதல் தந்தையை கொன்ற மகன்


ADDED : அக் 27, 2025 03:33 AM

Google News

ADDED : அக் 27, 2025 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாம்ராஜ் நகர்: ஆடுகளை பிரிப்பதில் தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், தந்தையை தாக்கி, காவிரி ஆற்றில் தள்ளி கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

சாம்ராஜ் நகர் ஹனுாரை சேர்ந்தவர் சங்கரன், 70. இவரது இரண்டாவது மகன் கோவிந்தராஜு, 40. கடந்த 23ம் தேதி சங்கரன் வெளியே சென்றார். மாலையாகியும் அவர் வரவில்லை.

குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மலை மகாதேஸ்வரா பெட்டா போலீசில் புகார் அளித்தனர்.

இதற்கிடையில், காவிரி ஆற்றில், சங்கரனின் உடல் கரை ஒதுங்கியது. சங்கரனின் மனைவி பழனியம்மா, தனது மகன் கோவிந்தராஜு மீது, மலை மகாதேஸ்வரா பெட்டா போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், கோவிந்தராஜிடம் விசாரித்த போது, தந்தையை கொன்றதை ஒப்புக் கொண்டார்.

விசாரணையில், தங்களிடம் வளரும் ஆடுகளை பிரிப்பதில், சங்கரனுக்கும், கோவிந்தராஜுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரமும் இதுபோன்று சண்டை ஏற்பட்டு உள்ளது.

இதனால் கோபத்தில் இருந்த கோவிந்தராஜு, தந்தை சங்கரன் வெளியே சென்றபோது, ஆடுகள் பிரிப்பது குறித்து சண்டை போட்டு உள்ளார். அப்போதும் அவர் முடியாது என்று கூறிவிட்டார்.

இதனால் கோபமடைந்த கோவிந்தராஜு, தந்தையை அங்கிருந்த மரக்கட்டையால் தலையில் தாக்கினார். மயங்கிய சங்கரனை, காவிரி ஆற்றில் தள்ளி கொன்றதாக தெரிவித்துள்ளார்.

அவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us