sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

விசாரணைக்கு ஆஜராக சோனு நிகமுக்கு சம்மன்

/

விசாரணைக்கு ஆஜராக சோனு நிகமுக்கு சம்மன்

விசாரணைக்கு ஆஜராக சோனு நிகமுக்கு சம்மன்

விசாரணைக்கு ஆஜராக சோனு நிகமுக்கு சம்மன்


ADDED : மே 04, 2025 11:33 PM

Google News

ADDED : மே 04, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பஹல்காம் சம்பவத்தில் கன்னடர்களை தொடர்புபடுத்தி பேசிய, பாடகர் சோனு நிகமுக்கு விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

பெங்களூரு ஆவலஹள்ளியில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்த இசை நிகழ்ச்சியில், பிரபல பாடகர் சோனு நிகம் கடந்த 30ம் தேதி பங்கேற்றார். தொடர்ந்து ஹிந்தி பாடல்களை பாடினார். கன்னட பாடல்களை பாடும்படி மாணவர்கள் கோஷம் கூச்சலிட்டார்.

கன்னடம்.... கன்னடம் என்று இப்படி நீங்கள் கூச்சல் போடுவதால் தான் பஹல்காம் தாக்குதல் நடந்தது என்று, சோனு நிகம் சர்ச்சை கருத்தை கூறினார்.

இதனை கன்னட அமைப்புகள் கண்டித்தன. அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஆவலஹள்ளி போலீசில் புகார் செய்தனர். நேற்று முன்தினம் சோனு நிகம் மீது வழக்குப்பதிவானது. தனது கருத்துக்கு சோனு நிகம் மன்னிப்பும் கேட்டு உள்ளார். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராக சோனு நிகமுக்கு, ஆவலஹள்ளி போலீசார் வாட்ஸாப், மின்னஞ்சல் மூலம் சம்மன் அனுப்பி உள்ளனர்.






      Dinamalar
      Follow us