/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறு சிறு பணிகளை மாணவர்கள் செய்யலாம்: செலுவராய சாமி
/
சிறு சிறு பணிகளை மாணவர்கள் செய்யலாம்: செலுவராய சாமி
சிறு சிறு பணிகளை மாணவர்கள் செய்யலாம்: செலுவராய சாமி
சிறு சிறு பணிகளை மாணவர்கள் செய்யலாம்: செலுவராய சாமி
ADDED : பிப் 16, 2026 06:13 AM
மாண்டியா: ''பள்ளி வளாகத்தில் செடிகள் நடுவது, துப்புரவு செய்வது போன்ற சிறு சிறு வேலைகளை, மாணவர்கள் செய்வது தவறு இல்லை,'' என விவசாயத்துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்தார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நாகமங்களாவின், நல்குந்தி கிராமத்தின், அரசு தொடக்க பள்ளி சிறார்களை, கட்டட பணிக்கு பயன்படுத்தியது குறித்து, தகவல் கேட்டறிந்தேன். மாணவர்களை பள்ளி வளாகத்தில் செடிகள் நடுவது, துப்புரவு செய்வது போன்ற சிறு சிறு பணிகளை செய்ய வைப்பது குற்றம் அல்ல. ஆனால் மற்றவரின் நிலத்துக்கு அழைத்து சென்று, கடுமையான வேலைகளை செய்ய வைப்பது தவறாகும். பள்ளி சிறார்கள் கையில் கடப்பாரை, மண் வெட்டி கொடுத்து வேலை செய்ய வைத்தது தெரிந்தால், கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
இதை பற்றி மாவட்ட பஞ்சாயத்து சி.இ.ஓ., விடம், அறிக்கை கேட்டுள்ளேன். அறிக்கை வந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கடினமான பணிகளுக்கு சிறார்களை பயன்படுத்துவது, சட்டப்படி குற்றம். கட்டட பணிகளுக்கு மாநில அரசு போதுமான நிதி வழங்குகிறது. இதை பயன்படுத்தி, கூலியாட்களை வைத்து, வேலை செய்து கொள்ளலாம். மாணவர்களை இத்தகைய பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என, அரசு தெளிவாக உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

