ADDED : மார் 07, 2026 06:20 AM
உள்கட்டமைப்பு
நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. பெங்களூரில், 2வது விமான நிலையம் உருவாக்கப்படும். இதற்காக இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தொழில்நுட்ப ஆலோசனை பெறப்படும்
மாநிலத்தில் உள்ள ஏழு உள்நாட்டு விமான நிலையங்கள் மேம்பாட்டிற்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
விஜயபுரா, ஷிவமொக்கா விமான நிலைய வளாகத்தில், பொது - தனியார் கூட்டமைப்பில் விமான பயிற்சி பள்ளி உருவாக்கப்படும்
ஜினிகெரா -- ராய்ச்சூர்; துமகூரு -- ராயதுர்கா; பேலுார் - சிக்கமகளூரு; குடச்சி -- பாகல்கோட்; -வாடி - கதக்; துமகூரு -- தாவணகெரே; பேலுார் - ஹாசன்; ஷிவமொக்கா -- ஷிகாரிபுரா -- ராணிபென்னுார்; தார்வாட் -- கித்துார் -- பெலகாவி ஆகிய புதிய ஒன்பது ரயில் பாதை பணிகள், மத்திய, மாநில அரசுகளின், 50:50 சதவீத பங்களிப்பில் மேற்கொள்ளப்படும்.
இந்த பணிகளுக்கு 2,950 கோடி ரூபாயும், நிலம் கையகப்படுத்த 2,682 கோடி ரூபாயும் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டில் கர்நாடக அரசு, 600 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது
பெங்களூரு ரூரல் ரயில் திட்ட பணிகள் காரிடார் - 2வில், பென்னிகானஹள்ளி -- சிக்கபானவாரா இடையே பணிகள் நடக்கின்றன. ஹீலலிகே -- ராஜனகுண்டே ரயில் பாதை பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. இரண்டு ரயில் பாதை பணிகளையும், 2030 க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பணிகளுக்காக இந்த நிதியாண்டில், 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது
பையப்பனஹள்ளி -- ஓசூர்; யஷ்வந்த்பூர் -- சன்னசந்திரா இடையில் இரட்டை ரயில் பாதை பணிகள் 812 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. கர்நாடக அரசு 406 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இந்த நிதி ஆண்டில் மேலும் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

