sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கு; என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைப்பு

/

சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கு; என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைப்பு

சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கு; என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைப்பு

சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கு; என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைப்பு


ADDED : ஜூன் 09, 2025 06:59 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பஜ்ரங் தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கை, என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைத்து, மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

தட்சிண கன்னடாவின் பன்ட்வால் தாலுகாவை சேர்ந்த சுகாஸ் ஷெட்டி, 35, பஜ்ரங் தள் தொண்டர். கடந்த மாதம் 1ம் தேதி இரவு மங்களூரு கின்னிபதவு என்ற இடத்தில், நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 12 பேரை மங்களூரு சி.சி.பி., போலீசார் கைது செய்தனர்.

சுகாஸ் ஷெட்டி கொலையில் பி.எப்.ஐ., அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாகவும், இந்த கொலைக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாகவும் பா.ஜ., தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த வழக்கை என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைக்கும்படி, அரசை வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து பா.ஜ., தலைவர்கள் மனு அளித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கை என்.ஐ.ஏ.,யிடம் ஒப்படைத்து நேற்று மாலை உத்தரவிட்டது. மத்திய அரசின் நடவடிக்கையை, கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா வரவேற்றுள்ளார்.






      Dinamalar
      Follow us