/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோவிலுக்கு சென்ற பெண் கொலையான மர்மம்
/
கோவிலுக்கு சென்ற பெண் கொலையான மர்மம்
ADDED : அக் 09, 2025 04:30 AM
கோலார் : கோவிலுக்கு சென்ற பெண், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கோலார் நகரின், பெள்ளூரு கிராமத்தில் வசித்தவர் மாலா, 40. இவருக்கு 20 ஆண்டுக்கு முன்பு, திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. மனைவி, மகளை பிரிந்து சென்ற கணவர், வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதனால், நரசாபுரா தொழிற்பகுதியில் உள்ள, ஊறுகாய் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியில் சேர்ந்து, மகளை மாலா வளர்த்து வந்தார். மகளை திருமணம் செய்து வைத்துவிட்டு மாலா தனியாக வசித்தார். தன்னுடன் பணியாற்றும் நண்பர்களுடன், ஆந்திராவில் உள்ள கோவிலுக்கு செல்வதாக, அக்கம், பக்கத்தினரிடம் கூறிவிட்டு, நேற்று முன்தினம் சென்றார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணியளவில் கோலாரின் சலுவனஹள்ளி கிராமத்தின் அருகில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், மாலா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது தலை மீது கல் அல்லது கனமான பொருளை போட்டு, மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர்.
மாலாவுக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறு உள்ளது. கொலைக்கு இது காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக, கோலார் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.