sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இறந்த தந்தை முகத்தை பார்க்க வராத மகன்

/

இறந்த தந்தை முகத்தை பார்க்க வராத மகன்

இறந்த தந்தை முகத்தை பார்க்க வராத மகன்

இறந்த தந்தை முகத்தை பார்க்க வராத மகன்


ADDED : ஏப் 01, 2025 08:12 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 08:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: மருத்துவமனையில் இறந்த தந்தையின் முகத்தை கூட பார்க்க மகன் வரவில்லை. இதனால் போலீசார், அவரது மகளை தொடர்பு கொண்டு தகவல் கூறியுள்ளனர்.

கோவாவை சேர்ந்தவர் சதீஸ்வர சின்ஹா, 62. இவர் ஹோட்டலில் பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் சதீஸ்வர சின்ஹா காயமடைந்தார்.

இவரை மார்ச் 22ம் தேதியன்று, சிகிச்சைக்காக அவரது மகன் உத்தம் சின்ஹா, பெலகாவியின் பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தார். அதன்பின் டாக்டர்களிடம் தகவல் கூறாமல் சென்றுவிட்டார்.

சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை சதீஸ்வர சின்ஹா உயிரிழந்தார். இந்த தகவலை கூற, உத்தம் சின்ஹா கொடுத்த மொபைல் போனில் மருத்துவமனை ஊழியர் தொடர்பு கொண்டனர்.

அப்போது தான், அந்த மொபைல் எண், அவருடையது அல்ல; அவரது தந்தை பணியாற்றிய ஹோட்டல் உரிமையாளரின் மொபைல் எண் என்பது தெரிந்தது.

ஹோட்டல் உரிமையாளரிடமே, உத்தம் சின்ஹாவின் மொபைல் எண்ணை பெற்று, சதீஸ்வர சின்ஹா இறந்த தகவலை கூறினர். ஆனாலும் அவர், தன் தந்தையின் முகத்தை கூட பார்க்க வரவில்லை.

என்ன செய்வது என்பது தெரியாமல் மருத்துவமனை ஊழியர்கள், ஷஹாபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் மருத்துவமனைக்கு வந்தனர்.

கோவாவில் உள்ள சதீஸ்வர சிம்ஹாவின் மகளின் மொபைல் எண்ணை கண்டுபிடித்து, தகவல் கொடுத்தனர்.

வருவதாக அவர் கூறியுள்ளார். அவரது வருகைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.






      Dinamalar
      Follow us