/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரவுடி கொலை வழக்கு எம்.எல்.ஏ., உட்பட மூவரிடம் ஒரே நேரத்தில் விசாரணை?
/
ரவுடி கொலை வழக்கு எம்.எல்.ஏ., உட்பட மூவரிடம் ஒரே நேரத்தில் விசாரணை?
ரவுடி கொலை வழக்கு எம்.எல்.ஏ., உட்பட மூவரிடம் ஒரே நேரத்தில் விசாரணை?
ரவுடி கொலை வழக்கு எம்.எல்.ஏ., உட்பட மூவரிடம் ஒரே நேரத்தில் விசாரணை?
ADDED : பிப் 17, 2026 05:44 AM
பாரதிநகர்: ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் சிறையில் இருக்கும், முதல் குற்றவாளி ஜெகதீஷை, காவலில் எடுத்து விசாரிக்க சி.ஐ.டி., தயாராகி வருகிறது.
பெங்களூரு பாரதிநகர் ரவுடி சிவகுமார் கொலை வழக்கில், ஐந்தாவது குற்றவாளியான, பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜை, தங்கள் காவலில் எடுத்து, சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
வழக்கின் முதல் குற்றவாளி ஜெகதீஷுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்ட போது, அவரை எனக்கு தெரியவே தெரியாது என்று, எம்.எல்.ஏ., மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஆனாலும், இருவரும் அடிக்கடி பேசிய, மொபைல் போன் அழைப்புகளை போலீசார் எடுத்து உள்ளனர்.
முதல் குற்றவாளி ஜெகதீஷ், நான்காவது குற்றவாளி கிரண் ஆகியோர், தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர்.
அவர்கள் இருவரையும் நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து, மூன்று பேரிடம் ஒன்றாக விசாரணை நடத்தி, தகவல்களை பெற சி.ஐ.டி., அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

