ADDED : ஏப் 25, 2025 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: பேத்தமங்களா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் காசநோய்க்கு தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.
பேத்தமங்களா சமுதாய மருத்துவ நிலைய அதிகாரி சாம்ஸ்குருத்தி கூறியதாவது:
பேத்தமங்களா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் காசநோய் வராமல் தடுக்க, கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தங்கவயல் தாலுகாவில் யாருக்கும் காசநோய் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இப்பணியை அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் எனும் ஆஷா ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். கர்ப்பிணியரை தவிர மற்ற அனைவருமே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

