தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போதையில் நண்பனை கொன்ற இருவர் கைது

போதையில் நண்பனை கொன்ற இருவர் கைது

போதையில் நண்பனை கொன்ற இருவர் கைது


ADDED : மே 15, 2025 02:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2025 02:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அம்ருதஹள்ளி: பெங்களூரில் பார்ட்டியின்போது ஏற்பட்ட தகராறில், பெயின்டரை கொன்ற இரு நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு, அம்ருதஹள்ளியை சேர்ந்தவர்கள் வீரமணி, பவன், அஜிஸ். மூவரும் பெயின்ட் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மே 8ம் தேதி இரவு தாசரஹள்ளி பிரதான சாலையில் உள்ள காலி இடத்தில் மூவரும் மது அருந்தி உள்ளனர்.

போதையில் அஜிசுக்கும், பவனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு, பவனை அஜிஸ் தாக்கினார். கோபமடைந்த வீரமணி, பவன் இருவரும் சேர்ந்து அங்கு கீழே கிடந்த மரக்கட்டையால் அஜிசை கடுமையாக தாக்கினர்.

கீழே விழுந்த அவரை, விபத்தில் காயம் ஏற்பட்டதாக கூறி, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மறுநாள் மே 9ம் தேதி தீவிர சிகிச்சைக்காக நிமான்ஸ் மருத்துவமனைக்கு அஜிசை அனுப்பி வைத்தனர்.

அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அம்ருதஹள்ளி போலீசார், நிமான்ஸ் மருத்துவமனைக்கு சென்றனர். நிமான்ஸ் டாக்டர்கள் அஜிசுக்கு ஏற்பட்ட காயத்தில் சந்தேகம் உள்ளதை போலீசிடம் தெரிவித்தனர். அங்கிருந்த வீரமணி, பவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது, உண்மையை ஒப்புக் கொண்டனர். மூன்று நாள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும், அஜிஸ் உயிரிழந்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us