sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மார்ச் முதல் மே வரை வெயில் வாட்டி எடுக்கும் வானிலை மையம் தகவல்

/

 மார்ச் முதல் மே வரை வெயில் வாட்டி எடுக்கும் வானிலை மையம் தகவல்

 மார்ச் முதல் மே வரை வெயில் வாட்டி எடுக்கும் வானிலை மையம் தகவல்

 மார்ச் முதல் மே வரை வெயில் வாட்டி எடுக்கும் வானிலை மையம் தகவல்


ADDED : பிப் 21, 2026 04:27 AM

Google News

ADDED : பிப் 21, 2026 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: அடுத்த மாதமான மார்ச் முதல் மே வரை, கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் கூறியதாவது:

அடுத்த மாதமான மார்ச் முதல் மே மாதம் வரை நாட்டின் பல பகுதிகளில், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும். கேரளா, தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில், வழக்கத்தை விட வெப்பநிலை அதிகம் இருக்கும்.

குறிப்பாக கர்நாடகாவின் வடக்கு பகுதிகளில் மார்ச் முதல் மே மாதம் வரை, வெப்பக்காற்று தீவிரமாக வீசும் வாய்ப்புள்ளது.

இப்பகுதிகளுக்கு, 'ரெட் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட, 65 முதல், 75 சதவீதம் வரை அதிகரிக்கும் அறிகுறி தென்படுகிறது.

இந்த மாதத்திலேயே வெப்பத்தின் தாக்கம், படிப்படியாக உயர்கிறது. வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் மார்ச் முதல், மே வரை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us