sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பேய் பிடித்ததாக சந்தேகம் பெண் அடித்துக்கொலை

/

 பேய் பிடித்ததாக சந்தேகம் பெண் அடித்துக்கொலை

 பேய் பிடித்ததாக சந்தேகம் பெண் அடித்துக்கொலை

 பேய் பிடித்ததாக சந்தேகம் பெண் அடித்துக்கொலை


ADDED : டிச 28, 2025 05:03 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலபுரகியை சேர்ந்த பெண்ணுக்கு பேய் பிடித்ததாகக் கூறி, அவரது கணவரின் குடும்பத்தினர் அடித்து கொன்ற சம்பவம், மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம் ஆலந்த் நகரை சேர்ந்தவர் முக்தாபாய், 38. இவருக்கும், மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரின் முரும் கிராதம்தை சேர்ந்த கிடப்பாவுக்கும் திருமணமாகி ஆறு ஆண்டுகளாகிறது. ஐந்து வயதில் மகன் உள்ளார்.

நான்கு நாட்களுக்கு முன், முக்தா பாய்க்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, வேப்பங்குச்சியால் சரமாரியாக அடித்து உள்ளனர். பின், பேயை விரட்டுவதாக கூறி, அவரை கங்காப்பூரில் உள்ள தத்தர் கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கும் அவரை வேப்பங் குச்சியால் மீண்டும் அடித்ததில் மயங்கி விழுந்தார். பின், அவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இதுதொடர்பாக முக்தாபாயின் சகோதரி ஸ்ரீதேவி, முரும் போலீசில் புகார் அளித்தார். பின், அவர் கூறுகையில், ''இது மூடநம்பிக்கை என்ற பெயரில் நடந்த கொலை. என் சகோதரியை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

முக்தா பாயின் தாயார் திப்பவ்வா கூறுகையில், ''என் மகளின் கணவர் கிடப்பா வீட்டில் இல்லாத போது, தனது ஐந்து வயது மகன் முன்னிலையில், தனக்கு பேய் பிடிக்கவில்லை என்று, என் மகள் கூறியும், அவரை அடித்து உள்ளனர்,'' என்றார்.

- நமது நிருபர் -:






      Dinamalar
      Follow us