sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பு: போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை

/

 பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பு: போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை

 பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பு: போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை

 பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பு: போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை


ADDED : நவ 22, 2025 05:05 AM

Google News

ADDED : நவ 22, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கபல்லாபூர்: மறுமணம் ஆசை காட்டி, விவாகரத்து ஆன பெண்களை, ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வாலிபர், போலீசாருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகாவில் வசித்தவர் கிரிஷ், 28. இவர் எளிதில் பணம் சம்பாதிக்கும் நோக்கில், பணக்கார, விவாகரத்து ஆன பெண்கள், தனியாக வசிக்கும் பெண்களை குறிவைத்தார். முகநுால், இன்ஸ்டாகிராமில் வழியாக, பெண்களை அறிமுகம் செய்து கொள்வார். அவர்களிடம் கவர்ச்சிகரமாக பேசி, மறுமணம் ஆசையை ஏற்படுத்துவார்.

திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, அவர்களுடன் உல்லாசமாக இருப்பார். இதை தன் மொபைல் போனில், வீடியோவாக பதிவு செய்து, பெண்களிடம் காண்பித்து மிரட்டி பணம் கேட்பார். பணம் கொடுக்காவிட்டால், வீடியோவை சமூக வலை தளத்தில் வெளியிடுவதாக மிரட்டுவார். அவமானத்துக்கு பயந்து, பெண்கள் பணம் கொடுத்தனர்.

இவரிடம் ஏமாந்த சில பெண்கள், தைரியமாக முன் வந்து, சிந்தாமணி ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, கிரிஷை தேடி வந்தனர். அவரது வீட்டை கண்டுபிடித்த மோலீசார், அவரை கைது செய்ய, நேற்று சென்றனர்.

ஆனால் பெண்கள் புகார் அளித்தது தெரிந்தவுடன், போலீஸ் பயத்தில் கிரிஷ், தன் வீட்டில் விஷம் குடித்த பின், துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.






      Dinamalar
      Follow us