sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

'பணம் பறிக்க முயற்சி' ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

/

'பணம் பறிக்க முயற்சி' ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

'பணம் பறிக்க முயற்சி' ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

'பணம் பறிக்க முயற்சி' ரிசர்வ் வங்கி எச்சரிக்கை


ADDED : ஆக 30, 2024 01:40 AM

Google News

ADDED : ஆக 30, 2024 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:ரிசர்வ் வங்கியின் பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி முயற்சிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவ்வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரிசர்வ் வங்கியின் பெயரைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் பல்வேறு வகையான மோசடிகளில் சிலர் ஈடுபட முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஓ.டி.பி., கே.ஒய்.சி., வங்கி லாக்-இன் விபரங்களை கேட்கும் நபர்களிடம் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி ஊழியர்கள் எனக்கூறி, வங்கியின் பெயர் அச்சிட்ட போலி கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்பி, லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாகவும் கூறி பணம் பறிக்க நடக்கும் முயற்சிகளை நம்பி ஏமாற வேண்டாம்.

வங்கி விபரங்கள், ஓ.டி.பி., போன்றவற்றை ரிசர்வ் வங்கியோ, அதன் ஊழியர்களோ கேட்பதில்லை.






      Dinamalar
      Follow us