sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

பேடிஎம் வங்கி: அமலாக்க துறை விசாரணை

/

பேடிஎம் வங்கி: அமலாக்க துறை விசாரணை

பேடிஎம் வங்கி: அமலாக்க துறை விசாரணை

பேடிஎம் வங்கி: அமலாக்க துறை விசாரணை


ADDED : பிப் 15, 2024 02:12 AM

Google News

ADDED : பிப் 15, 2024 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'பேடிஎம் பேமென்ட்ஸ்' வங்கிக்கு எதிராக அமலாக்கத்துறை, அதன் முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் ரிசர்வ் வங்கி, பிப். 29ம் தேதிக்கு பின், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி, டிபாசிட்கள் பெறுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடை உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு வங்கி தரப்பில் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், ரிசர்வ் வங்கி ஏற்க மறுத்தது.

கடந்த வாரம் பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜய்சேகர் ஷர்மா, ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.

இந்த நிலையில், தற்போது அமலாக்கத் துறை பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிக்கு எதிராக, முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

'பெமா' எனும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிமுறை மீறலில், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி ஈடுபட்டதா என்பது குறித்து விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us