sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

கோவையில் ரூ.400 கோடியில் பொது வசதி மைய பணி துவக்கம்

/

கோவையில் ரூ.400 கோடியில் பொது வசதி மைய பணி துவக்கம்

கோவையில் ரூ.400 கோடியில் பொது வசதி மைய பணி துவக்கம்

கோவையில் ரூ.400 கோடியில் பொது வசதி மைய பணி துவக்கம்


ADDED : ஏப் 10, 2025 11:56 PM

Google News

ADDED : ஏப் 10, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கோவை மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில், பொது பொறியியல் வசதி மையம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது.

'டி.என்.இன்ஜின்' எனும் தமிழக பொறியியல் மற்றும் புத்தாக்க மையம், 'டிட்கோ' நிறுவனம் மற்றும் டாடா டெக்னாலஜிஸ் ஆகியவை இணைந்து, 400 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த பொது வசதி மையத்தை அமைக்கின்றன.

இந்த மையம், மேம்பட்ட இயந்திர ஆய்வகம் உள்ளிட்ட ஒன்பது வளர்ந்து வரும் தொழில்நுட்ப ஆய்வகங்களை கொண்டிருக்கும்.

இத்திட்டப்பணிகள், இரு கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளன. முதற் கட்டமாக, நான்கு மேம்பட்ட அதிநவீன தொழில்நுட்ப மையங்கள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

விமானம், புதுப்பிக்கத்தக்க மின்சாரம், பரிசோதனை போன்ற வளர்ந்து வரும் துறைகளில் ஈடுபட்டுள்ள, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், சிறு, நடுத்தர நிறுவனங்கள் தயாரிப்புகளை, டி.என்.இன்ஜினில் ஆய்வு செய்யலாம்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய டி.என்.இன்ஜின் பணிகளை, இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us