ADDED : மே 17, 2024 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில், முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள், மின்சாரத்தில் ஓடும் கார், ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன. இதற்கு தேவையான உதிரிபாகம், உபகரணங்கள் தயாரிப்பில், சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இதையடுத்து கோவையில், 10 கோடி ரூபாய் செலவில், தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, பொது சோதனை வசதி மையம் அமைக்க உள்ளது.
இது, அறிவியல் மற்றும் தொழில் துறை சோதனை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து அமைக்கப்பட உள்ளது. பொது சோதனை மையத்தில், மின் வாகன உபகரணங்களின் தரத்தை பரிசோதிக்கலாம்.

