ADDED : ஏப் 25, 2024 10:51 PM

புதுடில்லி:'ஆடி' நிறுவனம், வரும் ஜூன் 1ம் தேதி முதல், இந்தியாவில் அதன் வாகனங்களின் விலையை, 2 சதவீதம் வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் அதன் வாகனங்களின் விலையை ஜூன் முதல், 2 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் காரணமாக, விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் 'மாருதி சுசூகி' இந்தியா நிறுவனம், அதன் 'ஸ்விப்ட்' மாடலின் விலையை, 25,000 ரூபாய் வரையிலும், குறிப்பிட்ட சில 'கிராண்டு விட்டாரா' மாடல்களின் விலையை 19,000 ரூபாய் வரையிலும், உயர்த்தியது. பணவீக்கம் மற்றும் உள்ளீட்டு பொருட்களின் அதிக விலையால், வாகன தயாரிப்பு நிறுவனங்கள், சமீபகாலமாக, தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தி வருகின்றன.
கடந்த நிதியாண்டில், ஆடி நிறுவனம் இந்தியாவில் 7,027 வாகனங்களை விற்பனை செய்து, 33 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.

