ADDED : ஆக 08, 2024 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கோவையை தலைமையிடமாகக் கொண்ட கே.எம்.சி.எச்., சென்னையில் தன் மருத்துவமனையை அமைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள காரப்பாக்கத்தில் 2.2 லட்சம் சதுரடி கொண்ட சொத்தை, 121 கோடி ரூபாய்க்கு இந்நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் மருத்துவமனை அமைப்பது குறித்து கே.எம்.சி.எச்., செயல் இயக்குனர் அருண் பழனிசாமி, 'எந்தவொரு நகரத்தில் கிளையை விரிவுபடுத்துவதாக இருந்தாலும், நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு அல்லது இயக்குனர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.