இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு உயர்த்தியது ஐ.எம்.எப்.,
இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு உயர்த்தியது ஐ.எம்.எப்.,
ADDED : ஏப் 17, 2024 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்தியாவுக்கான அதன் வளர்ச்சி கணிப்பை, 6.8 சதவீதமாக பன்னாட்டு நிதியம் உயர்த்தி உள்ளது.
பன்னாட்டு நிதியம் கடந்த ஜனவரியில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம், கடந்த 2024ம் நிதியாண்டு மற்றும் நடப்பு 2025ம் நிதியாண்டில், 6.50 சதவீதத்தில் இருக்கும் என கணித்திருந்தது.
எனினும், பன்னாட்டு நிதியத்தின் இந்திய நிர்வாக இயக்குனர் சுப்ரமணியன், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தார். இதை பன்னாட்டு நிதியம் மறுத்தது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த பன்னாட்டு நிதியத்தின் மதிப்பீடு, தொடர்ந்து தவறாகவே இருந்து வருவதாக சுப்ரமணியன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது பன்னாட்டு நிதியம், இந்தியாவுக்கான வளர்ச்சி கணிப்பை, 6.5 சதவீதத்தில் இருந்து, 6.8 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

