உள்ளடக்கத்திற்கு செல்ல

என்.எல்.சி., புதிய தலைவர் பிரசன்னகுமார் ஆச்சார்யா
என்.எல்.சி., புதிய தலைவர் பிரசன்னகுமார் ஆச்சார்யா
ADDED : செப் 18, 2026 06:18 AM

அ நிறம் | அளவு
என்.எல்.சி., இந்தியா குழுமத்தின் புதிய சேர்மனாக, அந்நிறுவனத்தில் நிதித்துறை இயக்குனராக பணியாற்றி வந்த பிரசன்னகுமார் ஆச்சார்யா நேற்று பொறுப்பேற்றார்.
ஒடிசாவின் கேந்திராபாராவை பூர்வீகமாக கொண்ட இவர், மின்சாரம், சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் உள்ள முன்னணி இந்திய நிறுவனங்களில், 30 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர், மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் விநியோகம், சுரங்கப்பணி மட்டுமின்றி, மெட்ரோ ரயில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிபுணத்துவம் கொண்டனர். ரூ. 63 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் இவர் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்.
