sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

யூரியா இறக்குமதி நிறுத்தப்படும்: மன்சுக்

/

யூரியா இறக்குமதி நிறுத்தப்படும்: மன்சுக்

யூரியா இறக்குமதி நிறுத்தப்படும்: மன்சுக்

யூரியா இறக்குமதி நிறுத்தப்படும்: மன்சுக்


ADDED : ஏப் 05, 2024 11:22 PM

Google News

ADDED : ஏப் 05, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:இந்தியா அடுத்த ஆண்டுக்குள் யூரியா இறக்குமதியை முற்றாக நிறுத்திவிடும் என, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

பயிர் உற்பத்தியை அதிகரிக்க, கடந்த 60 முதல் 65 ஆண்டு காலமாக, நாடு ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகிறது-.

மண் ஆரோக்கியத்திற்கும், பயிர் வளர்ச்சிக்கும் மாற்று உரங்கள் நல்லது என்பதால், அரசு அவற்றை ஊக்குவித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, நானோ திரவ யூரியா மற்றும் நானோ டி.ஏ.பி., எனப்படும் நானோ திரவ டி - அம்மோனியம் பாஸ்பேட் போன்ற மாற்று உரங்களை ஊக்குவிக்க, அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், யூரியா இறக்குமதியை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டு வர, அரசு புதிய உத்திகளை கடைப்பிடித்துள்ளது. அதில் ஒன்று, மூடப்பட்ட நான்கு யூரியா ஆலைகளை அரசு தற்போது புதுப்பித்து வருகிறது-.

உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய, ஆண்டுக்கு 350 லட்சம் டன் யூரியா தேவைப்படுகிறது-.

உள்நாட்டு உற்பத்தி திறன் வாயிலாக, 2014 - 15ல் 225 லட்சம் டன் தயாரிக்கப்பட்டது. தற்போது 310 லட்சம் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 40 லட்சம் டன் பற்றாக்குறையாக உள்ளது-. ஐந்தாவது ஆலை துவங்கப்பட்ட உடன், உற்பத்தி 325 லட்சம் டன்னாக அதிகரிக்கும். அத்துடன் 20 முதல் 25 லட்சம் டன் யூரியாவுக்கு பதிலாக, நானோ திரவ யூரியாவை பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, 2025ம் ஆண்டு இறுதிக்குள் நாடு இறக்குமதியை சார்ந்திருப்பது முடிவுக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

யூரியா இறக்குமதி

ஆண்டு இறக்குமதி (லட்சம் டன்னில்)



மாறியது 'ஸ்பிக்'

ஸ்பிக் எனப்படும் 'சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன்' நிறுவனம், யூரியா உற்பத்தி எரிபொருளுக்கான மூலப்பொருளாக, இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதில் 100 சதவீதம் முழுமையாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எண்ணெய் மற்றும் நாப்தா ஆகியவை, பாரம்பரியமாக உர உற்பத்திக்கான முதன்மை எரிபொருளாக இருந்தன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிப்பதால், அனைத்து உர உற்பத்தியாளர்களும் இயற்கை எரிவாயுவுக்கு மாறுமாறு அரசு அறிவுறுத்தியதை தொடர்ந்து, ஸ்பிக் நிறுவனம் முழுமையாக இயற்கை எரிவாயுவிற்கு மாறியுள்ளது.








      Dinamalar
      Follow us