ADDED : மார் 10, 2026 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:எஸ்.இ.இசட்., எனப்படும் 'சிறப்பு பொருளாதார மண்டலங்கள்' சட்டம்- 2005 மற்றும் ஏற்றுமதி கொள்கைகளில் சீர்திருத்தம் செய்வதற்கு ஆலோசனைகளை வழங்க, மத்திய அரசு 17 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இக்குழு, 'சிறப்பு பொருளாதார மண்டலங்கள்- 2.0' என்ற பெயரிலான ஆலோசனைகள், திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை அடுத்த 6 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும்.
ஏற்றுமதி அலகுகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கிடங்குகளில் உற்பத்தி மற்றும் இதர செயல்பாடுகள், வெவ்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு திட்டங்கள், மூலதனப் பொருள்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுத்திட்டம், வரியற்ற இறக்குமதி செய்ய அனுமதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைப்பது குறித்து இக்குழு ஆராயும்.

