sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 'ஸ்டார்ட் அப்' துவங்க 8 கிராமங்கள் தேர்வு

/

 'ஸ்டார்ட் அப்' துவங்க 8 கிராமங்கள் தேர்வு

 'ஸ்டார்ட் அப்' துவங்க 8 கிராமங்கள் தேர்வு

 'ஸ்டார்ட் அப்' துவங்க 8 கிராமங்கள் தேர்வு


ADDED : டிச 27, 2025 01:05 AM

Google News

ADDED : டிச 27, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : தமிழகத்தில், மாநில அரசின் நிறுவனமான 'ஸ்டார்ட் அப் டி.என்.,' தொழில் முனைவோருக்கான 'கிராமம் தோறும் புத்தொழில்' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து, கிராமங்களுக்கு, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை பரவலாக்கும் வகையில், 100 கிராமங்களை அடையாளம் காண மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

முதல்கட்டமாக, எட்டு கிராமங்களை அடையாளம் கண்டு, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பெரம்பலுாரில், பின்டெக் நிறுவனத்தின் ஆதரவுடன் எசனை கிராமத்தில் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று, திருவாரூரில் இரண்டு, மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் துவங்க கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us