'அடோபி' சி.இ.ஓ., சாந்தனு நாராயண் பதவி விலகுகிறார்
'அடோபி' சி.இ.ஓ., சாந்தனு நாராயண் பதவி விலகுகிறார்
ADDED : மார் 14, 2026 01:57 AM

சான் ஜோஸ்:'அடோபி' தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து சாந்தனு நாராயண் விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரிலிருந்து செயல்படும் முன்னணி மென்பொருள் நிறுவனம் அடோபி. புதிய தலைமை நிர்வாகி தேர்வு செய்யப்படும் வரை சாந்தனு பொறுப்பில் தொடர்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2007ல் அடோபியின் தலைமை பொறுப்பை ஏற்ற சாந்தனு, நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்றார். அடோபியை வெறும் மென்பொருள் நிறுவனமாக இல்லாமல், 'கிளவுட்' மற்றும் 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தில் உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றினார்.
அடோபியின் அடுத்த கட்ட வளர்ச்சியை, இளம் தலைமுறை தலைவர்களிடம் ஒப்படைக்க இதுவே சரியான தருணம் என்றும் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஆதரவளிக்க, நிறுவனத்தின் வாரியத்தலைவராக நீடிப்பேன் என்றும் சாந்தனு கூறியுள்ளார்.

