ADDED : நவ 30, 2024 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நாட்டின் தோட்டக்கலை பயிர்களை, நோய் தாக்குதல் இன்றி அதிக உற்பத்தி செய்வதற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியிடம், மத்திய அரசு 823 கோடி ரூபாய் கடன் பெற ஒப்பந்தம் செய்துள்ளது.
காலநிலை மாற்றத்தை சமாளித்து, தரமான, அதிக மகசூல் தரக்கூடிய வகையிலான பயிர் சாகுபடிக்கு ஆதரவளிக்க, இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்தியாவின் துாய பயிரிடும் திட்டத்தின்கீழ், இந்த ஒப்பந்தத்தில் ஏ.டி.பி.,யின் இந்திய பிரிவு அதிகாரி கெய் வீ யா, மத்திய நிதித்துறையின் பொருளாதார விவகாரப் பிரிவு இணைச் செயலர் ஜுஹி முகர்ஜி ஆகியோர் கையெழுத்திட்டனர். தாவர நோய் அறிதல் மற்றும் தடுப்புக்கான நவீன ஆய்வகங்கள் இந்த நிதியில் அமைக்கப்பட உள்ளன.

